2010-02-09

விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.

ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-

Ö அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?

Ö ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?

Ö இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?

Ö ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?

Ö தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?

Ö தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?

Ö மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?

Ö மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?

Ö யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை கூறினீர்களா? ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)

Ö இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?

Ö தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?

Ö அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா?

Ö செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்ற அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா?

Ö இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு உதவினீர்களா?

Ö உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா?

Ö பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து கொண்டீர்களா?

Ö அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா?

Ö ஃபஜ்ருத்தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா?

Ö நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும், இஸ்திஃக்ஃபார் என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா?

Ö இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்"" என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களா? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே..! (முஸ்லிம்)

Ö மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா?

Ö உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா?

Ö இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா?

Ö இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது மரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா? ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.

Ö இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே.. உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா?

Ö உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடி சந்தித்ததுண்டா?

Ö மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா?

Ö உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா?

Ö இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"" (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா?

Ö யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்.""

Ö இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?

மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.""

யா அல்லாஹ்! இந்த செய்திகளை மற்றவர்களுக்கு எத்தி வைப்பத்தோடு நின்று விடாமல் எங்கள் வாழ்விலும் பின்பற்றி, உன் பொருத்தத்தை அடைத்து, அந்த கடுமயான விசாரணை நாளில் எங்கள் அனைவதராயும் சுவன வாதிகளாத எழுப்புவாயாக ..ஆமீன் !!!

Read more...

2010-02-08

உங்கள் பிள்ளை பத்தாம் வகுப்பு படிக்கின்றதா? அவர்களது எதிர்காலம் குறித்து திட்டமிடும் நேரம் இதுவே!!

"பத்து வரை படிப்பு
பின் பாஸ்போர்ட் எடுப்பு,
செத்து செத்து பிழைப்பு
சேர்த்து வைத்ததை எல்லாம்
செலவளித்து அழிப்பு
"
என்று அதிரைவாசிகள் வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. வளைகுடா நாடுகளின் கதவுகள் நமக்கென திறந்தகாலம் இன்று இறந்த காலம் ஆகிவிட்டது. "எப்படியும் எம்புள்ள பொழச்சுக்குவான்" என்ற பெற்றோர்களின் நினைப்பு பெரும்பாலும் வெளிநாட்டு வருமானத்தை எதிர்நோக்கிய நினைப்பேயாகும்.
நம்புங்கள், வளைகுடா இனிமேலும் நமக்கென வளைந்திடா.
இக்கால நிலை என்ன?
இனிமேலும் அத்தகைய நிலை தொடர வேண்டுமா? என் வீட்டிலும், உங்கள் வீட்டிலும் இருக்கின்ற குழந்தைகளின் எதிர்காலத்தை திட்டமிட இதுவரை முனைந்திருக்கின்றோமா? குறைந்த பட்சம் 'திட்டமிடவேண்டும்' என்றாவது நினைத்திருக்கின்றோமா? நம் எதிர்கால சந்ததிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம்.

கல்வியாண்டில் இது கடைசி பருவம். மாணவர்களுக்கு 'ஆண்டுப் பரீட்ச்சை' நெருங்கும் நேரம். நம்மூரில் உயர்நிலை (பத்தாம்) வகுப்பில் பயிலும் மாணவர்களில் 98% சதவிகித மானவர்களுக்கு அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்ற தெளிவு, இல்லை இல்லை, சிந்தனை கூட இல்லாது படிக்கின்றனர்.
"அடுத்து என்ன படிக்கப் போகிறாய்" என 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனைக் கேட்டால் "ப்ளஸ் ஒன் தான்" என்கிறான் கேலியாக!! சரி 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனது பெற்றோரிடம் அடுத்து உங்க மகன்/மகளை என்ன படிக்க வைக்கப் போகிறீர்கள் எனக் கேட்டால், அதே பதிலே வருகிறது. இது நகைச்சுவையாகத் தோன்றலாம். உண்மையில், தன் மகனை/மகளை பதினொன்றாம் வகுப்பில் எந்த பிரிவில் சேர்த்துவிடப் போகின்றோம் என்கிற சிந்தனைக் கூட அவர்களுக்கு வந்திருக்காது.

நம் இலக்கை நாம் எங்கே தவறவிடுகின்றோம்?
இப்படி இலக்கற்று வாழுகின்ற மாணவன் இறுதியில் என்ன பிரிவில் சேருகின்றான் என்று பார்த்தால், தன்னுடைய நண்பன்/தோழி எந்தப் பிரிவில் சேருகின்றானோ/ளோ அந்த பிரிவில் தான் இவன்/ளும் சேருகின்றான்/ள். "ஏன் இந்த பிரிவை படிக்கின்றாய்" எனக் கேட்டால், "அதான் தேவலை" என்பார்கள். "தேவலை" என்பதற்கு இன்று வரை யாருக்கும் அர்த்தம் விளங்கியதாய் எனக்குத் தோன்றவில்லை. இதற்கு அவர்களைச் சொல்லி ஒன்றும் குற்றம் இல்லை. நான் படிக்கும் போது கூட, பி.எஸ்.சி என்பது ஒரு பட்டப்படிப்பு என்று தான் தெரியுமே ஒழிய, அதில் கணிதம், கணிணி அறிவியல் என உட்பிரிவுகள் இருக்கும் என, கல்லூரியில் சேர்கைக்காக போகின்ற வரைக்கும் எனக்குத் தெரியாது. இன்றளவும் உண்மை இது தான். இந்நிலை இனிமேலும் தொடர வேண்டாம்.

மருத்துவப் படிப்பில் பட்டதாரி ஆக வேண்டுமானால் பதினொன்று/பனிரெண்டாம் வகுப்புகளில் கணிதம் மற்றும் உயிரியல் (Biology) படித்திருக்க வேண்டும் என்னும் அடிப்படை அறிவு, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு இருத்தல் அவசியம்.
சரி, என்ன செய்ய வேண்டும்?
இவையாவற்றுக்கும் அடிப்படை திட்டமிடுதலே ஆகும்.
1) உங்கள் குழந்தை என்னவாக வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும், ஆனால் நீங்கள் மட்டுமே முடிவு செய்யாதீர்கள். உங்கள் மகன்/மகளோடு நெருங்கிப் பழகி, மனம் விட்டு பேசி, அவன்/அவளுக்கு ஆர்வம் இருக்கும் துறையைக் கண்டறியுங்கள்.
2) அவர்கள் குழப்பத்தில் இருந்தார்களானால், எதிர் கால நோக்கோடு நீங்கள் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் உங்கள் மகன்/மகளுக்கு ஆர்வமூட்டுங்கள்.
3) முடிவு செய்யப் பட்ட துறை சார்ந்த தகவல்கள், வேலைவாய்ப்பு, உயர் பதவிகள் உள்ளிட்ட தகவல்களைச் சேகரிக்கத் துவங்குங்கள்.
4) கல்வியில் மூத்த சான்றோர்கள் நம்மூரில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். தேவைப்படுக்கின்ற நேரத்தில் ஆலோசனை வழங்கவும், வழி காட்டவும் அவர்கள் என்றைக்கும் தயக்கம் காட்ட மாட்டார்கள். இது நிச்சயம். அத்தகையவர்களை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். நம்மூரில் வாழும் பள்ளி,கல்லூரி ஆசிரியர்களைச் சந்தித்து, நீங்கள் தெரிவு செய்து வைத்திருக்கும் துறைசார்ந்த விஷயங்களை கேட்டறியுங்கள். நிச்சயம் ஒரு தெளிவு பிறக்கும்.

உரிய நேரத்தில் திட்டமிடுதலும், அதனை செயல் முறைப் படுத்துதலும் இன்ஷா அல்லாஹ் நம்மூரில் நடக்கத் தொடங்கினால், நமதூரின் கல்வி முன்னேற்றத்திற்குஇதுவே போதுமானதாகும்.

பயனுள்ள கல்வியைப் பெற்று, நாமும் நமது சமுதாயமும் பயனுறும் படி வாழ நம் எல்லோருக்கும் அல்லாஹ் அருள் செய்திடுவானாக, ஆமீன்.

ஆக்கம்: அதிரை என்.ஷஃபாத்

Read more...

புஷ்ரா ஹஜ் நிறுவனம் குறித்து ஓர் ஹாஜியின் குற்றச்சாட்டு

தமிழக முஸ்லிம்களின் இணைய குழுமத்தில் கீழ்கண்ட மின்மடல் அனுப்பப்பட்டுள்ளது. இது உண்மையா என்று நமதூர் சகோதரர்கள் கருத்து தெரிவித்தால் சம்பந்தப்பட்ட குழுமத்திற்கும், குற்றச்சாட்டை அனுப்பியவருக்கும் பதிலிட வசதியாக இருக்கும்.
 
புஷ்ரா ஹஜ் நிறுவனம் சார்பில் விளக்கம் கொடுத்தாலும் அதையும் இங்கு பதிவதோடு சம்பந்தப்பட்ட குழுமத்திலும் தெரிவிப்போம்.
 
---------- Forwarded message ----------
From: Riyas Noushad <riyas_cr@hotmail.com>
Date: Feb 8, 2010 12:24 PM
Subject: BUSHRA HAJ SERVICE - WORST SERVICE


 
Dear brother,

Assalumu alaikkum,

Sorry I couldn't type in tamil but the following is something which should reach as many people as possible and I would request you to publish in your group.

Wassalam.



Assalumu alaikkum,

Alhmadulilah, with the grace of Allah, me with my wife performed haj in 2009.

We went through BUSHRA HAJ SERVICE which is operating from Chennai and Adirampatinam.

The service provided by this agency is in the worst possible way. Nothing was organised properly and they were handling things/issues as and when it comes without any planning at all.

For me, there is nothing wrong in doing haj travel with business motive of making profit. But this should also have the service mind set which I feel is missing in Bushra Haj (I do not want to use the term 'service' which is part of the name)

There only motive seemed to be making money by whatever possible means.

For a package of 22 days they have collected different amounts from different persons ranging from RS.1.95 to 2.35 lakhs per person.

They had give a lot of false promises regarding accommodation and other services.Elderly persons who came in the group suffered a lot.

All the above are related to worldly things which, in a way we can accept. But, there were so called imams whom  Bushra had brought them as guide for the group. They were giving guidelines to Haj which was not based on sunnah but based on the madhabs. Most of the haj rituals were different from of what prophet Rasulluah has performed in his only haj.

When we (some other brothers from the group ) questioned this to them, they said that they will follow only the madhabs and they told us to follow our own way if we do not like the way they are doing which for us is totally not acceptable. (of course we did not follow as per what they told us and also haj rituals(all rituals for that matter) are not something which you are I can do based on how and what we like).


We have seen some other travel agencies who had come from other states and the amount which they had collected is much less than what we had paid and their service was very good (from what we had observed).


I think this is high time to take some collective and harsh action against such travel agencies (which I believe is not only Bushra) and make sure that what ever hardship encountered does not happen in future (insha Allah).

Please let me know your inputs/feedback as what can be done to correct the behavior of such travel agencies.

Please spread the word as not to take BUSHRA travels for haj.

Wassalam,
Riyas.

Read more...

2010-02-06

மரண அறிவிப்பு

நடுத்தெருவைச் சார்ந்த ஜமாலுதீன் காக்கா அவர்களின் மகனும், இமாமுதீன், ஷம்சுத்தீன் ஆகியோரின் சகோதரருமான அல்தாஃப் அவர்கள், இன்று,06-பிப்ரவரி-2010, காலை இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். அன்னாரின் மஹ்ஃபிரத்துக்காக துஆ செய்யுங்கள்.


தகவல்: அதிரை என் ஷஃபாத்







Read more...

2010-02-05

'ஹி..ஹி..எங்கள் ஒட்டு எப்போதுமே உங்களுக்குத்தான்"

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 22ம் தேதி தொடங்குகிறது. 24ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 26ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. முதல் நாளன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்துவார்.

இதையடுத்து 24ம் தேதியன்று 2010-11ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்வார்.

26ம் தேதியன்று 2010-11ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்வார்.
மார்ச் 16ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும். பின்னர் ஏப்ரல் 12ம் தேதி மீண்டும் கூடும் என லோக்சபா செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.




நமதூரில் ஊரளவில் அதிரை ரூரல் டெவலப்மெண்ட் அஷோசியேசன், அதிரை பைத்துல்மால் ஆகியவையும், தமுமுக, ததஜ,முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் பின்புலமுள்ள சிறுபான்மையினர் நல அமைப்புகளும், தமிழகம் மற்றும் தேசியளவில் செயல்படும் அரசியல் கட்சிகளும், லயன்ஸ் கிளப் போன்ற சர்வதேச அமைப்புகளும் செயல்பட்டும், சில பெயரளவிலும் இருந்து வருகின்றன.

இத்தனை அமைப்புகள் இருந்தும் அதிரை ரூரல் டெவலப்மெண்ட் அஷோசியேசன் மட்டும் நமதூர் வழியாகச் சென்ற கம்பன் எக்ஸ்ப்ரஸ் ரயிலை மீண்டும் கொண்டுவரும் நோக்கில் அகல ரயில்பாதை திட்டத்தை துரிதப்படுத்த வேண்டி மத்திய/மாநில அமைச்சர்களை சந்தித்தும், துறை அமைச்சருக்கு நமதூர் கோரிக்கையை தெரியப்படுத்தவும் செய்தனர்.

அதிரை ரூரல் டெவலப்மெண்ட் அஷோசியேசன் தவிர ஏனைய அமைப்புகள் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டியே தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டுள்ளனர். அதிரை பைத்துல்மால் முஸ்லிம்களின் நிதியில் செயல்பட்டு வந்தாலும் திரட்டப்பட்ட நிதிகளை ஒப்புக்கொண்டபடி பகிந்து செலவிடுகிறது.

இவ்விரண்டு அமைப்புகள் தவிர இதர அமைப்புகள் எதற்காக நமதூரில் கிளை அமைத்து செயல்படுகின்றனர்? தேவைப்படும்போதெல்லாம் குடும்பத்துடன் கூட்டம்கூட அழைக்கும் அமைப்புகளே, எமதூரில் இருந்துவந்த ரயில்பாதையை மீண்டும் அகல ரயில்பாதையாகத் திரும்பப் பெறவும், அதன்வழியாகச் சென்றுவந்த கம்பன் ரயில் மீண்டும் செல்லவும் வேண்டி நீங்கள் சிறுதுரும்பையாவது எடுத்துப்போட்டீர்களா?

ரூ.400 கோடி மதிப்பிலான 135 கிமீ அகல ரயில்பாதை திட்டத்திற்கு வெரும் ரூ.10 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. சம்பந்தபட்ட துறை அமைச்சரிட.ம் இதை எடுத்துச்சொல்ல வேண்டிய நமது மக்கள் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் தேர்தலுக்கு மட்டும் கூழைக்கும்பிடு போட்டு வலம் வருகிறார்கள். நாமும் வெட்கமின்றி 'ஹி..ஹி..எங்கள் ஒட்டு எப்போதுமே உங்களுக்குத்தான்" என்று சொல்லி அனுப்பி வைக்கிறோம்.

முடங்கி கிடக்கும் திருவாரூர்-காரைக்குடி அகல ரயில்பாதை திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தக்கோரி ஆளும் அதிகார வர்க்கப் பூனைக்கு மணி கட்டப்போவது யார்?

ஓட்டுக்காக தொகுதி வலம் வரும் அரசியல்வாதிகளா? கூட்டம் கூட்ட குடும்பத்தோடு அழைக்கும் இயக்கங்களா? என்பதே விடைகாண வேண்டிய கேள்வி.

Read more...

About This Blog

  © Blogger template The Business Templates by Ourblogtemplates.com 2008

Back to TOP